Offline
பெண்கள் 400 மீட்டர் ஓட்டம்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற மலேசியா
News
Published on 05/11/2024

பெண்கள் 400 மீட்டர் ஓட்டம்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற மலேசியா

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் திடல்தடப் போட்டிகளில் மலேசியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார் ஷெரீன் சேம்சன் வல்லபாய். பெண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இவர் தங்கம் வென்றுள்ளார்.

ஷெரீன் எடுத்துக்கொண்ட நேரம் 52.53 விநாடிகள். தென்கிழக்காசிய விளையாட்டுகளின் பெண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மலேசிய வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது இதுவே முதல்முறை.

1999ஆம் ஆண்டு புருணையில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மலேசியாவின் என்.மணிமேகலை இப்போட்டியில் தங்கம் வென்றார்.

Comments