Offline
கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட சிலாங்கூரின் ஏழு பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை
News
Published on 05/15/2024

கோலாலம்பூர்:

சுங்கை சிலாங்கூர் (SSP1 WTP) நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் ஏழு இடங்களில் வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய பகுதிகள் இந்த தற்காலிக நீர் வெட்டினால் பாதிக்கப்படும் என்று, ஆயிர் சிலாங்கூர் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்தப் பகுதிகளில் ஜூன் 5 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் தொடங்கும் நீர் விநியோகத்தடை, சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், ஜூன் 7ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நுகர்வோருக்கு மீண்டும் தண்ணீர் விநியோகம் வழக்கத்திற்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அது தெரிவித்துள்ளது.

Comments