Offline
சாலை விபத்தில் ராணுவ வீரரும் மனைவியும் பலி: குழந்தைகள் காயம்
News
Published on 06/03/2024

 ஜாலான் குவா முசாங்-லோஜிங்கின் கிலோமீட்டர் 43 இல்  இன்று நடந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த வேளை அவர்களின் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் ரிட்வான் எஃபெண்டி யூசோப் (43) மற்றும் சுஹானா கைருடின் (37) என அடையாளம் காணப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணியளவில் விபத்து நடந்ததை Gua Musang மாவட்ட காவல்துறைத் தலைவர் Supt Sik Choon Foo உறுதிப்படுத்தினார். ரிட்வான் எஃபென்டி ஓட்டிச் சென்ற கார் ஈப்போவில் இருந்து குவா முசாங் நோக்கிப் பயணித்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

ரிட்வான் எஃபெண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது பக்கமாகச் சென்று சாலையோர வடிகால் சுவரில் மோதியதாக நம்பப்படுகிறது. விபத்தின் தாக்கத்தால் தம்பதியினர் தங்கள் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று அவர் கூறினார்.

சிக் மேலும் கூறுகையில், அவர்களின் குழந்தைகள் சிகிச்சைக்காக குவா முசாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது.

Comments