Offline
அரண்மனை4’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றி.;காஞ்சனா4’ம் ரெடி!
Entertainment
Published on 06/10/2024

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து ‘காஞ்சனா4’ படத்தை எடுக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

இந்த வருடம் தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் வராமல் இருந்தது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதற்குப் பதிலாக, பிற மொழிப் படங்களும் ரீ-ரிலீஸ் படங்களுமே கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தின. நிலைமை இப்படி இருக்க, சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை4’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி நூறு கோடி வசூலை எட்டியது.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு பூஸ்ட்டாக அமைய, இந்த ஹாரர் படங்களின் வரிசையில் ‘காஞ்சனா’ படத்தின் நான்காவது பாகத்தையும் தூசி தட்டி எடுக்க இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘காஞ்சனா4’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. படத்தை எழுதி, இயக்கி, அவரின் ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. நடிகர்கள் மற்றும் மற்ற தொழில்நுட்பக் குழுவினர்கள் குறித்தான விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Comments