Offline
ஏழு பில்லியன் ரிங்கிட் டீசல் மானியம் வழங்கப்படுகிறது- மக்கள் குழப்பமடைய வேண்டாம்
News
Published on 06/18/2024

கோலாலம்பூர்:

மலேசியாவில் டீசல் மானியக் கொள்கை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டதால் மக்களிடையே கவலையும் அக்கறையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர், மாற்றியமைக்கப்பட்ட டீசல் மானியக் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளார்.

தீபகற்ப மலேசியாவில் இன்னமும் ஏறக்குறைய ஏழு பில்லியன் ரிங்கிட்டுக்கு டீசல் தொடர்பான மானியங்கள் வழங்கப்படுகின்றன என்று, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.

மேலும் “டீசலுக்கு வழங்கப்படும் மானியங்கள் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை,” என்றார் அவர்.

“டீசல் மானியங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதை டீசல் மானியக் கொள்கை உறுதி செய்கிறது. மேலும் மானியங்கள் வீணடிக்காமல் இருப்பது மானியக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். அதிலிருந்து கிடைக்கும் சேமிப்புகள் பரந்த அளவுக்கு மக்களுக்குத் திரும்புவதை உறுதி செய்யும்.

“மக்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில் கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவத்து உள்ளிட்ட துறைகளுக்கு மிச்சமாகும் மானியம் பயன்படுத்தப்படும்,” என்று அன்வார் கூறினார்.

டீசல் கடத்தலைத் தடுக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Comments