Offline

LATEST NEWS

காவல்நிலையங்களின் வாயில்கள் 10 மணிக்கு மூடப்பட்டாலும் சேவை வழக்கம்போல் தொடரும்- IGP
Published on 07/11/2024 01:03
News

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள காவல் நிலையங்களும் இரவு 10 மணிக்கு மேல் வாயில்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டாலும், தேசிய காவல்துறை (PDRM) வழக்கம் போல் தனது சேவைகளை வழங்கும் என்று, போலீஸ்படை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதின் ஹுசைன் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் வழக்கம் போல் புகார்கள் மற்றும் அறிக்கைகளை பதிவு செய்யலாம் என்றும், புக்கிட் அமான் நிர்வாகத் துறையிடம் இது தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறை வழங்கப்பட்ட பிறகு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இரவு 10 மணி மூடும் நடைமுறை தற்போது முதல் கட்டமாக தொலைதூர அல்லது கிராமப்புறங்களில் உள்ள காவல் நிலையங்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

ஜோகூரில் உள்ள உலு திராம் காவல் நிலையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு 10 மணிக்கு மேல் நாட்டில் உள்ள காவல் நிலையங்களின் வாயில்களை மூடுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக நேற்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது சைபுதீன் நசுஷன் தெரிவித்தார்.

Comments