Offline

LATEST NEWS

பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த இரு பெண்கள்: ஜூலை 5ஆம் தேதி காணாமல் போனதாக குடும்பத்தினர் புகார்
Published on 07/12/2024 03:46
News

பினாங்கில் இன்று அதிகாலை காரில் கண்டெடுக்கப்பட்ட  இறந்த நிலையில் இருந்த இரு பெண்களும் சிறந்த நண்பர்கள் எனவும் ஜூலை 5ஆம் தேதி காணாமல் போனதாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புகார் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 25 மற்றும் 30 வயதுடைய இரண்டு பெண்களும் விடுமுறைக்காக பினாங்குக்கு வந்ததாக சினார் ஹரியனின் அறிக்கை கூறுகிறது.

செபராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸும் ஆயுதங்கள் அல்லது பிற குற்றவியல் பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். போலீசார் இந்த வழக்கை திடீர் மரண அறிக்கை (SDR) என வகைப்படுத்தியுள்ளனர் என்று ஹெல்மி மேலும் கூறினார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இன்று மதியம் 2 மணியளவில் இரு பெண்களின் உடல்களும் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. உடல்கள் அடக்கம் செய்ய நெகிரி செம்பிலானுக்கு கொண்டு செல்லப்படும்.

முன்னதாக, புதன்கிழமை (ஜூலை 10) மாலை 5.30 மணியளவில், தாமன் ஸ்ரீ ரம்பையில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா டபிள்யூஆர்-வி காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் மூலம் புகார் கிடைத்தது. முதற்கட்ட விசாரணையில் உடலின் சிதைவு நிலையை வைத்து பார்க்கும்போது அவர்கள் இறந்து ஐந்து நாட்களுக்கு மேலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,  இறந்தவர்களில் ஒருவரின் உறவினரின் தொலைபேசி எண்ணும் காரின் டேஷ்போர்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

Comments