Offline
என் குடும்பத்தை பற்றி பேச நீ யாரு?
Entertainment
Published on 07/22/2024

என் உழைப்பை ஒரு நொடி கூட உன்னால செய்ய முடியாது.. ராதிகா ஆதங்கம்

சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் நிகழ்ச்சி ஒன்றில் விருது வாங்கிய நிலையில் அப்போது தன்னை பற்றி நெகட்டிவ்வாக பரவி வரும் கருத்துகளுக்கும், நடிகைகள் குறித்து சிலர் விமர்சனங்களை வைத்து வருவதை குறித்தும் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார். ராதிகா பேசிய இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வரும் நிலையில் பல பிரபலங்களும் இதை பாராட்டி வருகிறார்கள்.

ஆனால் ராதிகா வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது சின்ன திரையில் நடிக்க தொடங்கிவிட்டார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பலமொழிகளிலும் சீரியல் மற்றும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு ராடான் நிறுவனத்தை தொடங்கி இருக்கும் ராதிகா பல சீரியல்களையும் தயாரித்தும் வருகிறார். இது போதாது என்று அரசியலிலும் காலடி எடுத்து வைத்து முக்கிய பிரபலமாக வலம் வந்த கொண்டிருக்கிறார். இத்தனை சிறப்புகள் இருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பேசப்படும் நபராகவும் ராதிகா இருந்து வருகிறார். அதே நேரத்தில் அடிக்கடி ராதிகாவின் குடும்ப விஷயங்கள் பற்றி இணையத்தில் பேசப்பட்டும் வருகிறது இது குறித்து சமீபத்தில் விகடன் சின்னத்திரை 2023 விருதுகள் விழாவில் விருது வாங்கிய ராதிகா சரத்குமார் அப்போது தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

Comments