Offline
கெரிக்கில் திடீர் வெள்ளம்!
News
Published on 08/10/2024

கெரிக்:

நேற்றிரவு பெய்த கனமழையை தொடர்ந்து, கெரிக் நகரில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பல பதிவுகள் மூலம் வைரலானது, அதில் நேற்றிரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடை வளாகங்கள் மற்றும் கடைவீடுகளைக் கொண்ட நகரத்தின் மையப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதை காட்டுகிறது.

இந்த வெள்ளச் சம்பவம் நேற்றிரவு 10.23க்கு முதன்முதலில் பதிவாகியதாகவும், கெரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பேராக் மாநில செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.

Comments