Offline
Menu
5 நாட்களுக்கு காணாமல் போன மனநலம் குன்றியவர் சடலமாக மீட்பு
Published on 08/12/2024 02:43
News

செகாமாட் வட்டாரத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் காணாமற்போன ஒரு மாற்றுத்திறனாளி பெண்மணியின் உடல் இன்று (ஆகஸ்ட் 11) காலை ஜெமெண்டாவில் உள்ள கம்போங் பெர்மாத்தாங் பாஞ்சாங்கில் வாழைத் தோப்புக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. காலை 10.15 மணியளவில் வாழைத் தோப்புக்கு அருகில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று செகாமாட் துணை மாவட்ட காவல்துறைத் தலைவர் துணைக் கண்காணிப்பாளர் என்ஜி ஸ்வீ சைட் தெரிவித்தார்.

60 வயதான ஜைய்டன் ஹம்சாவின் சடலம் அவரது இல்லத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். சில மணி நேரங்களுக்கு முன்பு அவள் இறந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. உயிரிழந்தவரின் உடலில் காட்டு விலங்குகள் கடித்ததற்கான தடயங்கள் அல்லது கீறல்கள் எதுவும் இல்லை என்றும், பிரேதப் பரிசோதனைக்காக உடல் செகாமட் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி, மனநலம் குன்றியவரான ஜெய்டன், காணாமல் போவதற்கு முன், மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது சகோதரர் ரசாலி, 65, தனது சகோதரியின் மறைவால் வருத்தப்பட்டாலும் அவரின் உடலை கண்டுபிடிக்க உதவிய போலீஸ்காரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

Comments