Offline
அமெரிக்காவில் இன்னொரு துப்பாக்கிச்சூடு; 4 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் படுகாயம்
Published on 09/23/2024 16:03
News

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பாருக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. எனினும் அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, அலபாமாவின் பர்மிங்காமில் ஹோட்டல்கள், பாருக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் குறித்து  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Comments