Offline
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு
Published on 11/01/2024 13:36
News

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரிமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம் ஐந்து பேர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மற்றொரு ஏவுகணை தாக்கப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

லெபனானில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ஏவுகணகைள் இஸ்ரேல் எல்லையை தாக்கின. ஆலிவ் அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள மெடுலா என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேலில் உள்ள மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

லெபனான் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரம் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் இந்து லெபனான் மீது இஸ்ரேல நடத்திய தாக்குதலில 2800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரம் காயம் அடைந்துள்ளனர்.

Comments