Offline
Menu
லாரி மீது பஸ் மோதி கோர விபத்து – 37 பேர் பலி
Published on 12/23/2024 02:09
News

பிரேசில் நாட்டின் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து நேற்று மாலை சால் பாலோ நகர் நோக்கி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 37 பயணிகள் பயணித்தனர்.

தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் டயர் வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments