ஈப்போ - லுமுட் நெடுஞ்சாலை அருகே உள்ள தாமான் சிலிபின் ரியா பகுதியில், கடந்த நாள் TNB கேபிளை திருட முயற்சித்த ஆடவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 6.07 PMக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்.
TNB கேபிளை வெட்டிய போது மின்சாரம் பாய்ந்து, கொடுத்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், மற்றவர் தப்பியிருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள், சிறப்பு புலன்விசாரணை அதிகாரி சார்ஜன் லியானா ஸுலைக்கா இப்ராஹிமுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.