Offline
ஏப்ரல் 25-28: பினாங்கில் 60 மணி நேர நீர் தடை
By Administrator
Published on 03/29/2025 07:00
News

ஏப்ரல் 25-28 வரை பினாங்கில் 60 மணி நேரம் அல்லது இரண்டு நாட்களுக்கு நீர் தடை ஏற்படும். இதனால் 341,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படலாம். பினாங்கு குடிநீர் நிறுவனம், 23 திட்டங்களின் மூலம் நீர் விநியோகம் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதில், சுங்கை பிறை இறுதி குழாய் இணைப்பும், சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலைய குழாய் மேம்படுத்தலும் அடங்கும். 18 மணி நேரத்தில் பணிகள் முடிந்தாலும், நீர் விநியோகம் மீண்டும் வழக்கத்திற்கு திரும்ப கூடுதல் நேரம் தேவைப்படலாம் என்று முதலமைச்சர் சௌ கொன் இயோவ் கூறினார்.

Comments