Offline
மலேசியப் பிரஜையான பி.பன்னீர் செல்வத்தின் மரண தண்டனையை சிங்கப்பூர் குறைக்க வேண்டும்
By Administrator
Published on 05/08/2025 09:00
News

மலேசிய ஆர்வலர்கள் குழு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான பன்னீருக்கு ஆதரவாகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் கோஷமிட்டனர். ஆசியான் தலைவராக மலேசியா, பன்னீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிங்கப்பூர் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பன்னீரின் மேல்முறையீட்டு மனு இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. 2014ல் போதைப்பொருள் கடத்தியதாக 2017ல் பன்னீருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments