சபாவில் நடைபெறவுள்ள மாநில தேர்தலில், தேசிய மற்றும் மாநில அரசியல் நிலைத்தன்மைக்காக பக்கத்தான் ஹராபான் (பக), பாரிசான் நேஷனல் (பா.நே) மற்றும் கபுங்கன் ரக்யாட் சபா (GRS) கூட்டணி அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும், பக, பா.நே மற்றும் GRS இடையிலான ஒத்துழைப்பு தற்போதும் ஆலோசனை நிலையிலேயே உள்ளது. அன்வார், சபா முதல்வர் ஹஜிஜியுடன் நேரடியாக சந்தித்து முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அதேவேளை, BN மற்றும் PH ஏற்கனவே கூட்டணி அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளன என்று செய்தியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆனால் GRS இதற்குப் பதிலளிக்கையில், தேவையானால் தனித்து போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், இதுபோன்ற ஒத்த பார்வையுடைய உள்ளூர் கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டணி தேவை என்பதற்கான காரணமாக, தேசிய அரசியல் நிலைத்தன்மை மற்றும் மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருப்பதாக அன்வார் விளக்கினார்.