மலேசிய அரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மகாராணி ராசா சரித் சொஃபியா, நாட்டின் அனைத்து புத்தமத விசுவாசிகளுக்கும் வேசாக் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, “பல்வேறு இனங்களைக் கொண்ட நம் சமுதாயத்தில், ஒற்றுமையும் அமைதியும் ஒருவருக்கொருவர் மதிப்பும் புரிதலும் கொண்டிருக்கும் போதே சாத்தியமாகும். இவ்வகை ஒருங்கிணைப்பு தான் நாட்டின் வலிமைக்கும் அடித்தளமாகும்.”
அத்துடன், “அனைவரும் இணைந்து அமைதியான, ஒற்றுமையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம். நாட்டின் புத்தமத மக்களுக்கு வேசாக் தின நல்வாழ்த்துகள்,” எனக் கூறியுள்ளனர்.
வேசாக் தினம் புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் புனித நாள்.