அஜித் மற்றும் ஜாக்கிசான் இருவரும் சினிமாவில் கடின உழைப்பாளிகள். சினிமாவைத் தவிர்த்து மற்ற கலை மற்றும் விளையாட்டுகளிலும் ஆர்வம் உள்ளவர்கள். ஆசியாவில் ஜாக்கிசான் பெரிய நடிகர் என்றாலும், தமிழ்நாட்டின் அஜித்குமார் சொல்வதை அவர் பின்பற்றுவது போல உள்ளது.ஏற்கனவே அஜித், காது குறைபாடுகளைத் தவிர்க்க அதிக சத்தத்தைக் குறைக்க ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனால் ஹெட்போன் விற்பனை அதிகரித்தது. மேலும், தொடர் பயணங்கள் மேற்கொள்வது புத்துணர்ச்சி அளிக்கும் என்று ரசிகர்களுக்கும் மக்களுக்கும் கூறினார்.தற்போது ஜாக்கிசானும் பயணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். பயணம் புத்துணர்ச்சி அளிக்கும் என்றும், பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பது நேர்மறை ஆற்றலைத் தரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.