Offline
ஒருவரை சுட்டுக் கொன்ற போலீஸ்; 25 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய எட்டுபேர் கைது
By Administrator
Published on 05/16/2025 09:00
News

பினாங்கு பாயன் லெபாஸில் இன்று அதிகாலை, போலீசுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி தாக்கிய 35 வயதுடைய ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்று விட்டனர். விசாரணையில், காரில் துப்பாக்கி, மரபண்டங்கள், மச்சீட்டிகள், மெத்தாம் பெரமின், வீட்டு திருட்டு கருவிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. உயிரிழந்த நபர் பல குற்ற மற்றும் போதைப்பொருள் வழக்குகளுக்கு முன்பே தொடர்புடையவர் என தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவருடன் தொடர்புடைய 7 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் பினாங்கில் நடைபெற்ற 25 கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் உட்பட சுமார் RM500,000 இழப்புகளை தீர்வாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Comments