Offline
எவரெஸ்டில் பலியான பிலிப்பைன்ஸ் மலையேறி.
By Administrator
Published on 05/17/2025 09:00
News

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற பிலிப்பைன்ஸ் மலையேறி ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுற்றுலாத்துறை வியாழக்கிழமை அறிவித்தது. 45 வயதான பிலிப் சான்டியாகோ என்பவர் சோர்வுடன் முகாம் நான்கை அடைந்து பின்னர் களைப்பின் காரணமாக இறந்தார். அவரது உடல் அங்கேயே விடப்பட்டுள்ளது. எவரெஸ்டில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், நேபாள அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க யோசித்து வருகிறது. இனி 7,000 மீட்டருக்கு மேற்பட்ட மலையில் ஏறிய அனுபவம் இருந்தால்தான் எவரெஸ்டில் ஏற முடியும் என்ற புதிய சட்டம் விரைவில் வரவுள்ளது.

Comments