இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என திரை உலகில் பன்முகத் திறமையுடன் பயணித்து வரும் சசிகுமார், ‘சுப்ரமணியபுரம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, நாடோடிகள் முதல் அயோத்தி வரை பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் அவர் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சசிகுமார் வெளியிட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.அதில், “யாராவது படம் சூப்பர் என்றாலும் மகிழ்ச்சி. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சொன்னா சந்தோஷத்துக்கு எல்லையே இல்ல. ‘தர்மதாசாகவே வாழ்ந்திருக்கீங்க, பல சீன்களில் கலங்கடிச்சீங்க. சமீபத்திய கதைத்தேர்வுகள் எல்லாம் அருமை’ என்ற ரஜினியின் வார்த்தைகள் மனதை தொட்டது,” எனத் தெரிவித்துள்ளார்.