ரஷ்யாவின் காசானில் நடைபெற்ற “இஸ்லாமிய உலகம்-ரஷ்யா: காசான் பொருளாதார மன்றம் 2025” கருத்தரங்கில், பிரதமர் தத்துக் ஸ்ரீ அந்வார் இப்ராகிம் உரையாற்றினார்.
அதில், முஸ்லிம் நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுடன் ஆசியான் மாதிரியைப் பின்பற்றி அதிக ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய ஒத்துழைப்பு டிஜிட்டல் மாற்றம், ஆற்றல் மாற்றம் மற்றும் இளைஞர் அதிகாரமூட்டல் போன்ற துறைகளை முன்னேற்றும் வகையில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அண்மையில் அமுல்படுத்தப்பட்ட ASEAN power grid மாதிரியான நடைமுறை முயற்சிகளை முஸ்லிம் நாடுகளும் மேற்கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என்றார்.
மேலும், இளைஞர்கள் அரசியல் முடிவெடுப்பில் பங்கேற்கும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.
இந்த மன்றத்தை நடத்திய தாதாரஸ்தான் மக்களுக்கும், அதனை ஆதரித்த ரஷ்ய அதிபர் புடினுக்கும் அந்வார் நன்றி தெரிவித்தார்.