பிகேஆர் துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் நூருல் இஃஜா மற்றும் ரஃபிஜி ரம்லி இடையே விவாதம் நடைபெற வேண்டுமா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என படாக்காத்தான் அரசியல் கூட்டணியின் பொதுச்செயலாளர் சைபுடின் நசுடியான் தெரிவித்தார்.
"இவர்கள் இருவரும் கட்சியின் முக்கியமான முகங்கள். அவர்களின் சாதனைகளை கட்சி உறுப்பினர்கள் அறிந்துள்ளனர். விவாதத்துக்கு சம்மதிப்பதா, தவிர்ப்பதா என்பது அவர்களின் விருப்பம்," என்றார் அவர்.
முன்னதாக, ரஃபிஜி ரம்லி முன்வைத்த விவாத அழைப்பை, நூருல் இஃஜா நிராகரித்திருந்தார்.