கோலாலம்பூர்: தெலுக் இஞ்சானில் 9 FRU அதிகாரிகள் உயிரிழந்த லாரி விபத்தில், அந்த லாரி கடந்த மாதம் புஸ்பகோம் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றதாக உரிமையாளர் ரவி (58) தெரிவித்துள்ளார்.
“பரிசோதனைக்குப் பிறகு சாலை வரியை புதுப்பித்தேன். அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தன,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி, புஸ்பகோம் சோதனை சரியாக நடந்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்க்க முடிந்திருக்குமென தெரிவித்திருந்தார்.