சிரம்பான்,பண்டார் ஸ்ரீ செண்டாயனில் தெருநாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்வதை ஊக்குவிக்கும் முகநூல் பதிவு தொடர்பாக, பல விலங்கு நல அமைப்புகள் செந்தூல் போலீசில் புகார் அளித்தன. "எல்லா வகையான விஷயங்களும் உள்ளன' முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட அந்தப் பதிவில், நாய்களுக்கு கோழித் தோலுடன் ரவுண்ட்அப் கலந்த விஷம் கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தப் பதிவுகள் விலங்கு நலச் சட்டம் 2015 இன் பிரிவுகள் 30, 31 மற்றும் தகவல் தொடர்பு சட்டம் 1998 இன் பிரிவு 233-ஐ தெளிவாக மீறுவதாகக் கூறிய அமைப்புகள், உரியவர்களிடம் சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரின.
மேலும், சமூக ஊடகங்கள் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைத் தடுப்பதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலங்குகளின் நலனுக்காக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.