இணையத்தில் முதலீட்டு விளம்பரத்தால் கவரப்பட்ட 40 வயது அலுவலக பெண் ஊழியர் ஒருவர் தனது சேமிப்புப் பணமான RM109,000 பணத்தை இழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இணைய வர்த்தக தளம் என கூறும் MooMoo என்ற இணையதளத்தில் முதலீடு தொடர்பான விளம்பரத்தைக் கண்டதும் அறிமுகமில்லாத ஆடவரின் வழிகாட்டலில் பேரில் அவர் RM 3,000 பணத்தை முதலீடு செய்துள்ளார்.இதன்பின் இரண்டு வாரங்களுக்குப் பிறகு RM 2,835 ரிங்கிட் லாபம் பெற்றதாகவும், லாபப் பணத்தைப் பரிவர்த்தனை செய்யாமல் தொடர்ந்து, MYCDTL என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டது.இதன்பின் ஏப்ரல் முதல் கடந்த வாரம்வரை சிறுக சிறுக வங்கியின் மூலமாகப் பணத்தை முதலீடு செய்த 40 வயது பெண், RM109,000 பணத்தைப் 7 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ததும் சம்மந்தபட்ட முதலீடு வலைத்தளம் முடக்கப்பட்டதாகக் காவல் நிலையத்தில் ஏமாற்றத்துடன் புகார் அளித்தார் என்று அவர் சொன்னார்.இவ்வழக்கு மோசடி செய்ததற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 420 இந்த கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.