நேபாளச் சேர்ந்த 55 வயதான காமி ரிட்டா ஷெர்பா, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 31வது முறையாக வென்றார். 1994ல் முதல் முறையாக சிகரம் தொட்ட இவர், தற்போது இந்திய இராணுவ குழுவை வழிநடத்தியும், மீதமிருந்த உறுப்பினர்களையும் சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த சாதனை உலகிலேயே அதிகமான எவரெஸ்ட் ஏறல் சாதனை ஆகும். அவரின் முயற்சிகள் நேபாளத்தை உலகில் அறியச்செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.