ஆசியான் நாடுகளுடனான GCC-யின் இருவழி வர்த்தகம் 2032 ஆம் ஆண்டுக்குள் 180 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இதை ஊக்குவிக்கின்றன. 2023-ல் GCC மொத்த வர்த்தகம் 130.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதாகவும், அது ஆசியானின் ஏழாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியுள்ளதாக குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா தெரிவித்துள்ளார்.GCC மற்றும் ஆசியான் இடையேயான FTA பேச்சுவார்த்தைகள் முதலீட்டுக் வாய்ப்புகளையும், விநியோக சங்கிலிகளையும் மேம்படுத்தும். GCC தூய்மையான எரிசக்தி, AI, சைபர் பாதுகாப்பு, ஃபின்டெக் போன்ற டிஜிட்டல் பொருளாதாரத்திலும் ஒத்துழைக்கும் திட்டம் உள்ளது.ஆசியான் பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்த உச்சிமாநாட்டை இரு பிராந்தியங்களுக்கிடையேயான நம்பிக்கை மற்றும் நட்பின் அரிய தருணமாகக் கருதினார். காசா பிரச்சினை தொடர்பாக, இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்த உலக அழுத்தத்தை வலியுறுத்தினார்.பாலஸ்தீன மக்களின் நியாய உரிமைகளுக்கு ஆதரவும், காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளையும் ஆசியான் நாடுகள் ஒன்றுபட்ட நிலையில் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.