மலேசியாவில் 3.8 கிலோ ஷாபு கடத்தல் வழக்கில் லிம் வேய் ஜீக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறை மற்றும் 12 சாட்டையடி தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 2021 ஆம் ஆண்டு செந்துபுட் பகுதியில் குற்றம் நடந்தது.போலீசை வேய் ஜீயே போதைப்பொருளுக்கு வழிநடத்தினார். அவர் தன்னை பார்சல் டெலிவரி ஊழியராக கூறியிருந்தாலும், அவரது கைப்பற்றப்பட்ட கைபேசியில் தொடர்புடைய செயலிகள் எதுவும் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.