நைஜீரியாவின் வடக்கு மத்திய பகுதியில், மொக்வா நகரில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 500-க்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கி, 700 பேர் பலியாகி, 500க்கும் மேற்பட்டோர் காணாமல் உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து, சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. ஜனாதிபதி போலா தினுபு நிவாரணம் மற்றும் உதவிகளை விரைவில் வழங்க உத்தரவிட்டார். 60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிலான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் 600 பேர் உயிரிழந்த வெள்ளப்பெருக்கு நிகழ்ந்திருந்தது.