Offline
பங்சார் கட்டுமானப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்; காணாமல்போனதாக கூறப்பட்ட பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணியின் உடல் என போலீசார் உறுதிப்படுத்தினர்
By Administrator
Published on 06/06/2025 09:00
News

கோலாலம்பூர்:

பங்சாரில் உள்ள ஒரு கட்டுமானப் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம், காணாமல் போனதாகக் கூறப்படும் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஜோர்டான் மைக்கேல் ஜான்சன்-டாய்லின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜான்சன்-டாய்லின் மாமா, அவரது பச்சை குத்தலின் அடிப்படையில் இறந்தவரை அடையாளம் காட்டியுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

“கண்டுபிடிக்கப்பட்ட சடலம், ஜூன் 2 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்படும் ஜோர்டான் ஜான்சன்-டாய்லின் உடல் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு உயரத்திலிருந்து விழுந்ததால் மார்பில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கான காரணம் என நம்பப்படுகிறது.

“சம்பவ இடத்தில் எந்த குற்றவியல் கூறுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Comments