பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் புதிய பொது வீட்டுவசதித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது பொதுப் போக்குவரத்து சேவையை விரிவான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான ஒரு படியாகும் என அவர் கூறினார்.
இத்தகைய வீட்டுவசதி மேம்பாடு குறைந்த வருமானம் கொண்ட குழுவிற்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், மிகவும் நிலையான, கட்டமைக்கப்பட்ட நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு வழி வகுக்கும்.
மேலும் பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் வீடுகளை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது. ஆனால் அதற்கு சில சட்ட திருத்தங்கள் தேவைப்படுவதாக மெனாரா பிரசரானாவில் நடைபெற்ற மலேசிய மடானி ஆய்வாளர்கள் மன்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.