சமூக வலைத்தளங்களில் மாணவர்களை குறிவைக்கும் ஆபாசப் பதிவுகள் பற்றி உடனடியாகப் புகார் செய்ய வேண்டும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா வலியுறுத்தினார். பள்ளி மாணவர்களை சைபர் குற்றச்செயல்களில் இருந்து பாதுகாக்க இது முக்கியமான நடவடிக்கையென அவர் கூறினார்.
பாலியல் விழிப்புணர்வுக்கான “பீர்ஸ்” திட்டம் 2027 பாடத்திட்டத்தில் அடங்கவுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு வழங்க இது உதவும்.
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும். பெற்றோரும் பாலியல் பாதுகாப்பு குறித்து பிள்ளைகளுடன் உரையாடும் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.