பினாங்கு மாநில சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், சுகாதார சட்டங்களை மீறியதாக 167 நோட்டீசுகள் வழங்கப்பட்டு, 7 இடங்கள் உடனடியாக மூடப்பட்டன. இதில் ஒரு பாலர் பள்ளியும் அடங்கும்.
சிகரெட் சட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டங்களை மீறியதற்காக மொத்தமாக RM43,600 அபராதம் விதிக்கப்பட்டது. 50 சிகரெட் பொருட்கள், 111 உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துடன் HFMD பரவல் அபாயத்தால் ஒரு பாலர் பள்ளியும் மூடப்பட்டது.