இந்தோனேசியாவின் ஃப்ளோரஸில் உள்ள லெவோடோபி லாக்கி-லாக்கி எரிமலை செவ்வாயன்று வெடித்து, 10 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மண்டலத்தை வெளியிட்டது.பாலி விமான நிலையத்திலிருந்து வரும் மற்றும் செல்லும் 24க்கும் மேற்பட்ட சர்வதேச, உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Jetstar, Virgin Australia, Air India உள்ளிட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.சாம்பல் அருகிலுள்ள கிராமங்களில் பெய்து, குறைந்தபட்சம் ஒரு கிராமம் காலிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை உயிரிழப்பு இல்லை.இந்தோனேசியா பசிபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ பகுதியில் உள்ளதால், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் நடக்கின்றன.