மெக்சிகோவின் பசிபிக் கடற்கரை நோக்கி எரிக் புயல் Category 4 அளவுக்கு வலுப்பெற்று பயங்கரமாக நகர்கிறது. இது வாழ்வுக்கு ஆபத்தான வெள்ளம், மண்ணிசறுகள் போன்ற இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க புயல் மையம் எச்சரித்துள்ளது.ஓஆக்சாகா, குரெர்ரோ மாநிலங்களில் கரையை தாக்கும் முன் மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. சியாபாஸ் மாநிலத்திலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.அகபுல்கோவில், கடலோர மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கைகள் வழங்கினர். கடைகள், படகுகள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளன. புர்டோ எஸ்கொண்டிடோ நகரமும் தயார் நிலையில் உள்ளது.மெக்சிகோ அரசு 2,000 தற்காலிக தங்குமிடங்களை அமைத்து, நூற்றுக்கணக்கான ராணுவத்தினரையும் மின்சார ஊழியர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. பள்ளிகள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.2023ல் ஒடிஸ் புயல் 50 உயிர்களை பறித்த பின்னணியில், மக்கள் தீவிர முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.