கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், பாலஸ்தீன ஆதரவு மாணவர் போராட்டத்தில் முக்கியமாக இருந்த மஹ்மூத் களில், மூன்று மாத காவலுக்குப் பிறகு அமெரிக்காவில் விடுவிக்கப்பட்டார்.மார்ச் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட களிலுக்கு நாடுகடத்தல் அபாயம் இருந்த நிலையில், நீதிபதி உத்தரவினால் அவர் விடுதலை செய்யப்பட்டார். குடியுரிமை விண்ணப்பத்தில் தவறுகள் என்ற அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
அமெரிக்க குடிமகளான அவரது மனைவி, விடுதலையால் குடும்பம் நிம்மதியாகச் சுவாசிக்க முடிகிறது என தெரிவித்தார். களில், “பொதுக்கொலையை எதிர்த்ததால் யாரும் கைது செய்யப்படக்கூடாது” எனக் கூறினார்.