சீனாவின் ஹூனான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம், பல குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மத்திய மற்றும் தென் சீனாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால், மேலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.ஹூனானில் பெய்த பெருமழையால் லிசூய் ஆற்றில் வெள்ளம் பாதுகாப்பு அளவை விட 2 மீட்டர் உயரம் கடந்து பாய்ந்து, கரையோர பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஹுபே மாகாணத்திலும் வெள்ளம் வீடுகளை சூழ்ந்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.