ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கான்வாயில் செலி சிங்கையா என்பவர் மலர் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் கார் சக்கரின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.விபத்து கடந்த ஜூன் 18ம் தேதி குண்டூர் மாவட்டத்தில் நடந்தது. சம்பவத்திற்கு பிறகு சிங்கையா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் உயிர் காப்பாற்ற முடியவில்லை.ஓய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.