13வது மலேசியா திட்டத்தின் வெற்றி ஒவ்வொரு அமைச்சகம், நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையைப் பொறுத்தது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நாட்டின் வளர்ச்சி திசையை தீர்மானிக்கும் 13MP, யதார்த்தக் கொள்கைகளுடன் கூடிய அணுகுமுறையை நோக்கமாகக் கொண்டது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சமுதாய நலனையும் பொருளாதார சீர்திருத்தங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டம், அடுத்த மாத இறுதியில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.