சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள் மற்றும் ரான்சம் வேர் தாக்குதல்களால் உருவாகும் அவசரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்க, ஆசியான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் சைஃபுத்தீன் நசூஷியான் தெரிவித்தார்.பாதுகாப்பில்லாமல் வளர்ச்சி இல்லை என்பதையும், ஆன்லைன் அச்சுறுத்தல்களை எதிர்க்க சட்ட, புலனாய்வு, தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மலேசியா, ஆசியான் ஒத்துழைப்பு மற்றும் நடுநிலைத்தன்மையுடன் செயல்படத் தொடர்ந்து உறுதி அளிக்கிறது.