ரஷ்யா-உக்ரைன் எல்லையில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தின் கொரெனேவோ கிராமத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்கலில், சீனாவின் Phoenix TV-வின் 63 வயதான செய்தியாளர் லூ யுகுவாங் காயமடைந்தார். அவரது தலையில் சிறு கீறல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனை செல்ல மறுத்துள்ளார்.இந்த தாக்கத்தை ரஷ்யா கடுமையாக கண்டித்து, இது ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை அச்சுறுத்துவதாக கூறி, ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.லூ, ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது, "மேற்கத்திய ஊடகவியலாளர்கள் குர்ஸ்கில் இல்லை; நாங்கள் சீன பத்திரிகையாளர்கள் உண்மையை வெளிக்கொணர விரும்புகிறோம்" என்றார்.2022-இல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் நிலையில், இரு தரப்பும் பல தடவைகள் எல்லைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.