அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாட்டைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றனர்.இந்தியாவின் இஸ்ரோவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுபான்ஷு சுக்லா (39) இந்த பயணத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். “ஜெய் ஹிந்த்... ஜெய் பாரத்” என எழுச்சியுடன் துவங்கிய இவர், 28 மணி நேரத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) சென்றடைந்தார்.ISS-ல் உள்ள குழுவினர் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “விண்வெளி அனுபவம் அற்புதமாக இருந்தது, எதிர்பார்ப்புகளை மிஞ்சியது. அடுத்த 14 நாட்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் ஆவலுடன் உள்ளேன்” என சுபான்ஷு சுக்லா பெருமிதமாக தெரிவித்தார்.