Offline
சமூக வலைத்தளங்களில் போலியான 188,528 பதிவுகள்; உடனடியாக நீக்குமாறு MCMC உத்தரவு
By Administrator
Published on 06/29/2025 08:00
News

கோலாலம்பூர்:

சமூக வலைத்தளங்களில் உள்ள 188,528 பதிவுகள் போலியானது என தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC அடையாளம் கண்டுள்ளது, அதில் 173,642 சட்டவிரோதமான உள்ளடக்கங்களை நீக்கியிருப்பதாக தொடர்பு துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களின் மூலமாகப் பரப்பப்படும் பதிவுகளை MCMC முழுமையாக ஆராயும் என்றும், முக்கியமாகப் போலியான விளம்பரங்களை அடையாளம் கண்டு வருவதாக அவர் கூறினார்.

இது வரையில் 96,000 ஆன்லைன் சூதாட்டப் பதிவுகளை நீக்கியிருப்பதாகவும் 46,000க்கும் மேற்பட்ட போலி முதலீடுகள் தொடர்பான மோசடி விளம்பரங்களையும் நீக்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இதன் அடுத்தகட்டமாக ஆபாச உள்ளடக்கங்களை நீக்கி வருவதாகவும் ஃபாஹ்மி கூறினார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளை முழுமையாக நீக்க MCMCக்கு முழுமையான அதிகாரம் இல்லை, ஆனாலும் முக்கிய தரவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

Comments