Offline
பெசூட்டில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி
By Administrator
Published on 06/30/2025 09:00
News

கோலா திரெங்கானு :

நேற்று இரவு பெசூட்டில் உள்ள பூலாவ் பெர்ஹெந்தியன் கடலில் 15 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இரவு 10 மணியளவில் நடந்த சம்பவத்தில், பூலாவ் பெர்ஹெந்தியான் கெசிலில் இருந்து பூலாவ் பெர்ஹெந்தியான் பெசாருக்குச் செல்லும் வழியில் பலத்த அலைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து, பின்னர் கோஸி சாலட் ரிசார்ட்டிலிருந்து 0.05 கடல் மைல் தொலைவில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.

குவாந்தான் கடல்சார் மீட்பு மையம் (MRSC) மூலம் இந்த சம்பவம் குறித்த தகவல் இரவு 10.55 மணிக்கு கிடைத்ததாக திரெங்கானு கடல்சார் இயக்குநர், கடல்சார் கேப்டன் ஹமிலுடின் சே அவாங் தெரிவித்தார்.

“உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு ஒரு மலேசிய கடல்சார் ரோந்துப் படகு உடனடியாக அனுப்பப்பட்டது என்றும், பாதிக்கப்பட்ட அனைவரையும் கிராமவாசிகள் மீட்டு, அவர்களுக்கு ஆரம்ப உதவியை வழங்க விரைவாக செயல்பட்டனர், ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 19 முதல் 57 வயதுக்குட்பட்ட ஒன்பது பெரியவர்களும், மூன்று முதல் 11 வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகளும் சென்றனர் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் ஆறு வயது சிறுவன், மூன்று வயது சிறுமி மற்றும் ஒரு ஆடவர் என மூன்று பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Comments