Offline
Menu
பாண்டார் கன்ட்ரி ஹோம்ஸில் பருத்தி தொழிற்சாலை தீக்கிரை
By Administrator
Published on 07/01/2025 09:00
News

பாண்டார் கன்ட்ரி ஹோம்ஸில் பருத்தி தொழிற்சாலையில் தீ விபத்து – 90% கட்டிடம் அழிந்தது

பாண்டார் கன்ட்ரி ஹோம்ஸில் உள்ள Carefree Cotton Industrial Sdn Bhd தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தில் தொழிற்சாலையின் சுமார் 90 சதவீதம் பகுதிகள் தீக்கிரையானது.

சம்பவம் பாது 22, ஜாலான் குந்தாஙில் உள்ள பருத்தி தொழிற்சாலையில் ஏற்பட்டது. யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதம் தொடர்பான மதிப்பீடு இன்னும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

செலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை காலை 10.14 மணி அளவில் அவசர அழைப்பு பெற்றது.

பணிக்குழு தலைவர் மொஹ்த் ரிஸான் மாட் ஸின் கூறியது:

“நாங்கள் வந்த சமயம், சுமார் 90% கட்டிடம் ஏற்கனவே தீக்கிரையாகி இருந்தது. நாங்கள் நான்கு ஹோஸ் லைன்கள் மற்றும் ஏழு நாஸில்கள் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம்.”

தீயை காலை 11.25 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மொத்தம் 23 பேரும்,

3 தீயணைப்பு வாகனங்கள்,

1 அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) அலகு,

1 தண்ணீர் டேங்கர் ஆகியவை செயல்படுத்தப்பட்டன.

பாண்டார் கன்ட்ரி ஹோம்ஸில் பருத்தி தொழிற்சாலையில் தீவிபத்து – 90% சேதம், உயிரிழப்பு இல்லை

Comments