மலேசியர்கள் டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் டிஜிட்டல் அமைச்சு வழங்கும் இலவசப் பயிற்சிகளில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
அமைச்சின் கீழ் இயங்கும் மை டிஜிட்டல் கார்ப்பரேஷன் இந்தப் பெரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன் வழி மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதோடு உலகளாவிய நிலையில் போட்டி ஆற்றல்மிக்கவர்களாகவும் திகழ முடியும் என்று அவர் கூறினார்.