Offline
Menu

LATEST NEWS

UPSI விபத்துக்குப் பின் பேருந்து விதிகள் கடுமைடையும் – ஃபாஹ்மி
By Administrator
Published on 07/22/2025 09:00
News

கடந்த மாதம் 15 UPSI மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்தைத் தொடர்ந்து, பேருந்துகளின் பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்படும் என்று தகவல் மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாஜில் தெரிவித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும், விரைவில் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிய விதிகள், பேருந்துகளின் பராமரிப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்புச் சீராய்வு ஆகியவற்றை உள்ளடக்கும். "இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்தில் மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட, முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று ஃபாஹ்மி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விபத்தின் முக்கிய காரணங்களில் ஒன்று பேருந்து அதிவேகமாகச் சென்றது என்று சாலை போக்குவரத்து துறை (JPJ) தலைமை இயக்குநர் டத்தோ எடியி ஃபாட்லி குறிப்பிட்டார். விபத்து நடந்த எக்ஸ்பிரஸ் பேருந்து நிறுவனத்திற்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் JPJ தெரிவித்தது.

Comments