ஜப்பான்: மேலவை தேர்தலில் தோல்வி - இஷிபா பதவி விலக மறுப்பு, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆலோசனை
ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேலவை தேர்தலில் ஆளும் கூட்டணி கடுமையாகத் தோல்வியடைந்தபோதிலும், பிரதமர் ஷிகெரு இஷிபா பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக வரி பேச்சுவார்த்தைகளைக் காரணம் காட்டி அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆய்வாளர்கள் இஷிபாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகக் கூறுகின்றனர். கடந்த ஆண்டு கீழ் சபை தேர்தலில் கட்டுப்பாட்டை இழந்ததுடன், இந்த மேலவை தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் வாக்குகளை இழந்ததும் இதற்கு முக்கிய காரணங்கள். எதிர்கட்சிகளான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி (CDPJ) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறது.
இந்தத் தேர்தலில், தீவிர வலதுசாரியான சான்சீடோ கட்சி மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது, இது ஜப்பானில் மக்கள்வாத அரசியலின் ( ஜனரஞ்சகவாதி) (அரசியல்)வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.